Tamil proverbs - தமிழ் பழமொழிகள்
Please leave a remark at the bottom of each page with your useful suggestion.
Tamil proverbs (தமிழ் பழமொழிகள்)...
கா
காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும், காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும். |
காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான். |
காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும். |
காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும். |
காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா? |
காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா? |
காணி ஆசை கோடி கேடு. |
காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம் |
காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே. |
காப்பு சொல்லும் கை மெலிவை. |
காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம். |
காய்த்த மரம் கல் அடிபடும். |
காய்ந்தும் கெடுத்தது, பெய்தும் கெடுத்தது. |
காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி. |
காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ? |
கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை |
காலம் செய்கிறது ஞாலம் செய்யாது. |
காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும். |
காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும். |
காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை. |
காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும். |
காற்றில்லாமல் தூசி பறக்குமா? |
காற்று உள்ளபோதே தூற்றிக்கொள். |
காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும். |
Credit: tamilproverbs